2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'ஐ.எஸ் அமைப்பை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும்' (LIVE)

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஏனைய மதத்தவர்களைக் கொலை செய்யுமாறும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துமாறும், இவ்வாறான கொடூரங்களைச் செய்யுமாறும், இஸ்லாத்தில் கூறப்படவில்லை. இவ்வாறானவர்களை, இஸ்லாமியர்கள் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது. நான், ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த அமைப்பினரை, இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றும், அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தடுக்க முடியாமற்போனமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால்இன்று (28) முன்னிலையான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், சாட்சியமளிக்கத் தொடங்கினார்.

இதன்போது சாட்சியமளித்த அவர், சஹ்ரான் ஹாஸிம் என்ற நபரை, தான் ஒருபோதும் கண்டிருக்கவில்லை என்றார்.

சாட்சியத்தின் நேரடி வீடியோ காட்சியைக் காண, https://bit.ly/2Lw0U6C என்ற இணைப்பை அழுத்துங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .