2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஓகஸ்ட் 5இல் புதுக்கூட்டணி

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக, புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

கைச்சாத்திடும் அந்தத் தினத்திலேயே, புதியக் கூட்டணியின் சின்னம் பற்றி அறிவிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாகவும் “இரவு விழுந்த குழிக்குள், பகலிலும் விழப் போவதில்லை” என்றும் அவர் கூறினார்.

மிகவும் பிரபலமான கட்சியை பிளவுபடுத்தி இல்லாமல் ஒழிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று, ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழு அமைத்துக் கொண்டிருப்பவர்களிடம் தான் வேண்டு​கோள் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .