2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சபாநாயகருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலைக்கப்பட்டிருந்த  நாடாளுமன்றத்தை  நீதிமன்றம் வழங்கிய  தடையுத்தரவுக்குப் பின்னர்  மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரியட் அட்மிரல் சரத் வீரசேகரவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிவாதிகளாக சபாநாயகர், சட்டமா அதிபர், நாடாளுமன்றின் பொதுச்செயலாளர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வெவ்வேறு அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் ஜனாதிபதியிடம் கடந்த 27ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதாகத் தெரிவித்து வெளியிட்ட வர்த்தமானிப் பத்திரத்துக்கு இடைக்காலத் தடையுத்தரவை விதித்தது.

எனினும் கலைக்கப்பட்டிருந்த  நாடாளுமன்றத்தை  நீதிமன்றம் வழங்கிய  தடையுத்தரவுக்குப் பின்னர்    கூட்டுவதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்தமையானது அரசமைப்புக்கு முரணானது என சரத் வீரசேகரவின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் சபாநாயகர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இலங்கையின் அரசமைப்​பை மீறியுள்ளதாக அறிவிக்குமாறு கோரியே ரியட் அட்மிரல் சரத் வீரசேகரவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X