2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சின்னமே முக்கியம் எண்ணமில்லை

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பெயர் எதிர்வரும் உள்ளு​ராட்சி மன்றத் தேர்தலுக்காக ஒருமித்த தமிழ் முற்போக்கு கூட்டணி என மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​​​கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணியானது கொழும்பு, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கொழும்பு மாநகர சபை,கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி தொகுதியின் சில இடங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் ஏணி சின்னத்தின் கீழ் ஒருமித்த தமிழ் முற்​போக்கு கூட்டணி என்ற பெயரில் போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டார்.

ஏனைய இடங்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பு மாநகரசபையின் மேயர் பதவிக்கு ஒருமித்த தமிழ் முற்போக்கு முன்னணி சார்பில் யார் களமிறங்குவது என்பது தொடர்பில் நாளை அறிந்துக்கொள்ளலாம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

எந்த சின்னத்தின் கீழ் போட்டியிட்டாலும் சின்னம் முக்கியமில்லை எண்ணம் தான் முக்கியம் என அமைச்சர் மனா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X