2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சுவிஸ் பஸ் விபத்தில் இலங்கையர் பலர் காயம்

Editorial   / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கையர்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலா மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

40 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்,  சூரிச்சின் வட பகுதியில், அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில், இரண்டு கனரக வாகனங்களுடன் மோதியுள்ளதாக சூரிச் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் நேரப்படி நேற்று (18)  பிற்பகல் 3.15க்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .