2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ ஜன.2ஆம் வாரம் விடுவிக்கப்படும்’

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில், பாதுகாப்பு படையினர் வசமிருக்கும் காணிகளில், 1,099 ஏக்கர் காணிகள், 2019 ஜனவரி 2 ஆம் வாரத்தில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தரைப்படைத் தலைமையகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களி​லேயே இவ்வாறு காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும் அறிவித்துள்ளது.

இந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன என்று தெரிவித்துள்ள தலைமையகம், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவத்தினரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ், 194 ஏக்கர் விடுவிக்கப்படும் அதேவேளை, அதே கிராம சேகவர் பிரிவில், வனபரிபால திணைக்களத்தின் கீழுள்ள காணிகளில், 285 ஏக்கர் விடுவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில், 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும். 

இந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச காணிகள் அடங்குகின்றன என்று தெரிவித்துள்ள தலைமையகம், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, இராணுவத்தினாரால் பயிரிடப்பட்ட காணிகளும் அதில் அடங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரம் வடக்கு கிராம சேவகர் பிரிவின் கீழ், 194 ஏக்கர் விடுவிக்கப்படும் அதேவேளை, அதே கிராம சேகவர் பிரிவில், வனபரிபால திணைக்களத்தின் கீழுள்ள காணிகளில், 285 ஏக்கர் விடுவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உடையார்குளம் கிராம சேவகர் பிரிவில், 120 ஏக்கர் காணி விடுவிக்கப்படும். 

மன்னார் மாவட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லான்குளம் கிராம சேவகர் பிரிவின் கீ​ழ், 500 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று இலங்கை தரைப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .