2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள புதிய நியமனங்கள்

Editorial   / 2019 ஏப்ரல் 29 , பி.ப. 12:44 - 1     - {{hitsCtrl.values.hits}}

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியால் புதிய கணக்காய்வாளர் நாயகம், சட்டமா அதிபர், பதில் சட்டமா அதிபர் ஆகியோருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சுலந்த விக்ரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

இதேவேளை, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி முன்னிலையில் பிரதம நீதியரசர் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.

மேலும் சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்பல டி லிவேரா பதில் சட்டமா அதிபராகவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் என். கே. இலங்கக்​கோன் பாதுகாப்பு அமைச்சின் ​ஆலோசகராகவும் ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 1

  • Chandirarasu Menan Monday, 29 April 2019 05:14 PM

    we have to build Zero corruption nation. corruption is the cancer for the nation. every problems are starting from the corruption.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .