2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'தலைமைத்துவம் தொடர்பில் செயற்குழுவில் அறிவிக்கவும்'

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் ஒருவரின் தேவை தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக  அந்தக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட தலைவர்களுக்கு  இடையில் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் கலந்துரையாடி புதிய தலைமைத்துவம் தொடர்பில் எதிர்வரும் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்குமாறு ரணில் கூறியுள்ளார்.

கட்சியை முழுமையாக மறுசீரமைத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும்  ரணில் விக்ரமசிங்க நேற்றைய கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியதாக  அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .