2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திகாம்பரத்தின் அமைச்சுக்கு சிறந்த நிதி செயலாற்றுகை விருது

Kogilavani   / 2017 நவம்பர் 13 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் சிறந்த நிதிச் செயலாற்றுகைக்கான வெள்ளி விருதை, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு பெற்றுக்கொண்டுள்ளது.

 

நாடாளுமன்றத்தின் அரசாங்க பொது கணக்குகள் குழுவின் ஏற்பாட்டில், கடந்த 2015 ஆம் ஆண்டின் நிதிக்கட்டுப்பாடு பற்றிய சட்டத்திட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு கட்டுப்பட்டு செயலாற்றுகை தொடர்பில், திருப்திகரமான பெறுபேற்றை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான தேசிய விருது வழங்கும் வைபவம், நாடாளுமன்ற குழு அறையில், இன்று (13) நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில், சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது,  மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சுக்கு மேற்படி விருது வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சின் சார்பில் அதன் செயலாளர் திருமதி ரஞ்சணி நடராஜபிள்ளை விருதையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X