2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

திருமலை திண்டாடுகிறது: 6 பிரிவுகள் அதிரடியாக முடக்கம்

Editorial   / 2021 ஏப்ரல் 29 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டன.

இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிராதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

உப்புவேலி பொலிஸ் பிரிவில்-சுமேதங்கபுரம் கிராம​ சேவகர் பிரிவு

திருகோணமலை பொலிஸ் பிரிவில்- மூதோவ் கிராம சேவகர், கோவிலடி கிராம சேகவர், லிங்காநகர் கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன.

சீனக்குடா பொலிஸ் பிரிவில்- கவட்டிகுடா கிராம சேவகர், டயினாபே கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .