2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாடாளுமன்றம் தொடர்பான தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால நாடாளுமன்றம்  ​கலைக்கப்படுவது தொடர்பில், வெ ளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான  தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வழங்கப்படவுள்ளது.
 
பிரதம நீதியரசர் நளின் பெரேரா நீதியரசர்களான சிசிர த ஆப்ரு, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஸித் மலலகொட, முர்து பெர்னாண்டோ ஆகிய உயர்நீதிமன்ற நீதியர்சர்கள் 7 பேர் கொண்ட குழுவால் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

குறித்த மனு மீதான விசாரணைகள் கடந்த 4ஆம் திகதி தொடக்கம் 7ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் இதன் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .