Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 23 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாயத்துறைக்கு அச்சுறுத்தலாகவுள்ள படைப்புழுவை (சேனா) கட்டுப்படுத்துவதற்கு, யுத்தத்துக்கு முகங்கொடுப்பதைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் வினைத்திறனுடன் செயற்பட நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்காக ஒரு காலவரையறையை நிர்ணயித்து, தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்க மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன், பூச்சிக்கொல்லி முறைமையொன்றை நடைமுறைப்படுத்துமாறும், ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
படைப்புழு பரவி வருவதன் காரணமாக, விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்துக் கண்டறிவதற்காக, நேற்று (22) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதிச் செயலணி ஒன்றை அமைத்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், அச்செயலணி, தினமும் ஒன்றுகூடி, இந்த பேராபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மேலும், இந்த ஜனாதிபதிச் செயலணியின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, மகாவலி பிரதியமைச்சர் அஜித் மன்னப்பெரும மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் ஒருவரையும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவரையும், இந்தச் செயலணியில் இணைத்துக்கொள்ளுமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். இந்தப் பேராபத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து, விவசாய சங்கங்களுக்கும் விவசாய சமூகத்துக்கும் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும், ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago