2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரதமரும் இன்று விசேட அறிவிப்பு

Editorial   / 2018 ஜனவரி 03 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இன்று (03) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென, ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஆகியோருக்கான விசேட மாநாடு, இன்று நடைபெறும். இந்த மாநாட்டில் வைத்தே, விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளாரென, அறிய முடிகின்றது.

இந்த மாநாடு, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் உள்ள சகல மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்காகப் போட்டிடும் வேட்பாளர்களில், ஆகக்கூடுதலான எண்ணிக்கையான வேட்பாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகள் தொடர்பிலான விசேட அறிவிப்பொன்றை, 3 ஆம் திகதியன்று தான் விடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி​ மைத்திரிபால சிறிசேன, திங்கட்கிழமை (01) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .