2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

Editorial   / 2018 மே 02 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய இன்றைய தினம் எட்டு இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் பதவியேற்றனர்.

ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 18 பேர் பதவியேற்றனர்.

இராஜாங்க அமைச்சர்கள்;-

மொஹான் லால் கிரேரு - உயர்கல்வி மற்றும் கலாசார விவகார இராஜாங்க அமைச்சர்

ஏ.டி.சம்பிக்க பிரேமதாஸ - பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

பாலித ரங்கே பண்டார - நீர் வழங்கள், வடிகாலமைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா - பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

ஶ்ரீயானி விஜேவிக்கிரம - மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர்

லக்ஸ்மன் செனவிரத்ன - பொதுநிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் இராஜாங்க அமைச்சர்

வீரகுமார திஸாநாயக்க - மஹாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

திலிப் வெத்தாரச்சி - மீன்பிடி, நீரியல்வளம் மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்

பிரதியமைச்சர்கள்;-

துனேஸ் கங்கந்த - காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு பிரதியமைச்சர்

எம்.எஸ்.அமீர் அலி - மீன்பிடி, நீரியல்வளம் மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர்

ரஞ்சன் ராமநாயக்க - சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர்

கருணாரத்ன பரணவிதான - விஞ்ஞானம் தொழில்நுட்பம், ஆய்வு திறன்அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரிய பிரதியமைச்சர்

பாலித தெவரப்பெரும - நிலைத்திருக்கும் அபிவிருத்தி, வனஜீரராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதியமைச்சர்

சாரதி துஷ்மிந்த - நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர்

முத்து சிவலிங்கம் - சமூக நலன்பேணல் மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பிரதியமைச்சர்

மனுச நாணயக்கார - தொழில்நுட்பம், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர்

எச்.எம்.எம்.ஹரீஸ் - பொது முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சர்

அலி ஷாஹிர் மௌலானா - தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .