Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹியங்கனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 3 சிறுவர்களும் 3 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதுடன், வானின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது வானில் 12 பேர் பயணித்துள்ளதோடு, அவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில், மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து தியத்தலாவ நோக்கிப் பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றுடன் எதிர்த் திசையில் பதுளையிலிருந்து மஹியங்கனையை நோக்கி பயணித்த வானொன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில், இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த மேலும் இரு பெண்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்தைத் தொடர்ந்து பஸ்ஸின் சாரதியை மஹியங்கனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
8 hours ago