2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மைத்திரி – மஹிந்த மீண்டும் சந்திப்பு?

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக மீண்டும் இரண்டு வாரங்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த வாரம்,  பத்தரமுல்லையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் இல்லத்தில், மைத்திரி – மஹிந்த சந்தித்து இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையுமானால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேருவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “நாட்டை விற்பனை செய்தவர்களுடன் அரசாங்கத்தை அமைக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X