2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

விசாரணை அறிக்கை இன்று சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது

Editorial   / 2019 மே 08 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீவிரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கு ஏதுவான காரணம், அதன் பொறுப்புகளிலிருந்து விலகியமைத் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கையானது, இன்றைய தினம் (8) சட்டமா அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பான முதலாவது அறிக்கை ஜனாதிபதிக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக, உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலலகொட, அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் இளங்கக்கோன் ஆகியோரைக் கொண்ட குழுவே நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவின் அறிக்கையானது இன்னும் ஒரு வாரத்தில் மக்களுக்கு காண்பிக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .