2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹேமசிறி, பூஜித கைது

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும்  குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில்  ஹேமசிறி பெர்ணான்​டோவும், நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிசிக்சைப் பெற்று வந்த நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும்   குற்ற விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையிலேயே, ஹேமசிறி பெர்ணான்டோ இன்று காலை வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X