2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமரர் வி.கே.வெள்ளையனின் நினைவுதினம்...

Kogilavani   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும் தொழிற்சங்கத் துறவியுமான  அமரர் வி. கே. வெள்ளையனின்  49 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள், ஹட்டனில் இன்று (2) நடைபெற்றன. 

தொழிலாளர் தேசியசங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் தலைமையில்  சங்கத்தின் ஹட்டன்  தலைமை காரியலயம், ஹட்டன் ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கோவில் என்பவற்றில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், டிக்கோயா தோட்டத்திலுள்ள அன்னரின் சமாதிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான  பி.கல்யாணகுமார், பிரதி நிதிச்செயலாளரும்  மத்திய மாகாணசபையின்  முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள்  பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .