2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இ.தொ.கா சந்திப்பு

Kogilavani   / 2021 ஜனவரி 07 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கரை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (7) உத்தியோகப்பூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடியது.

இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக, இ.தொ.கா அறிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X