2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவி...

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.ஜபீர்  

அம்பாறை மாவட்டத்தில் ஊடரங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில், ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜகளை, இராணுவத்தினர் இலங்கை போக்குவரத்துக்கு சபை பஸ்களின் ஊடாக, வங்கிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வந்து ஓய்வூதியப் பணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு உதவிதனர்.

இதன்போது,  சிரேஷ்ட பிரஜைகள் சமூக இடைவெளியை பேணி முககவசம் அணிந்து பாதுகாப்பான வகையில் பஸ்களில் வங்கிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வங்கியில் பணத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர்,  அவர்கள் மீண்டும் பஸ்களின் மூலம் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது சிரேஷ்ட பிரஜைகளின் வசதி கருதி, வங்கிகள், அரச மருந்தங்கள், பாமசிகள் அனைத்தும் திறக்கப்பட்டு ஓய்வூதியம் பெறுவர்களுக்கு வங்கிசேவை, மருத்துவ கொள்வனவு இடம்பெற்றமையையும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .