Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓசோன் படையைப் பாதுகாத்தல் சம்பந்தமான மொன்ட்ரியல் நடப்பொழுங்கின் 30ஆவது ஆண்டுகள் நிறைவையும் சர்வதேச ஓசோன் தினம் 2017ஐயும் முன்னிட்டு, கண்டக்குளிய சதுப்பு நிலத்தில், 2,000 கண்டல் தாவரங்கள், இன்று (18) நாட்டி வைக்கப்பட்டன.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர் ஆளுநர் அநுராதா ஜயரத்ன, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், கற்பிட்டி கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து 850 மாணவர்கள், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி, வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.டி.என்.தாஹிர், புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த, புத்தளம் வலய (தமிழ்)உதவிக் கல்விப் பணிப்பாளர் சற்.ஏ.சன்ஹிர் உட்படப் பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு: க.மகாதேவன்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago