2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நினைவேந்தல்...

Editorial   / 2017 ஜூலை 27 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடைச் சிறைப் படுகொலைகளின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் மற்றும் கறுப்பு ஜுலையை நினைவு கூறும் நிகழ்வு, தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ இயக்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு ஊறணியிலுள்ள அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இன்று (27) மாலை நடைபெற்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரட்ணம், எம்.நடராஜா மற்றும் ரெலோ இயக்கத்தின் பிரசார செயலாளரும் சிவன் பௌண்டேசன் நிறுவனத்;தின் தலைவருமான கணேஸ் வேலாயுதம் உட்பட ரெலோ இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .