2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மகிழ்ச்சி ஆரவாரம்...

Editorial   / 2018 நவம்பர் 13 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாக,  உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை, இன்று (13) பிறப்பித்தது.

 

எதிர்வரும் டிசெம்பர் மாதம் 07ஆம் திகதி வரை, இந்த இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்குமெனவும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் இரத்துச் செய்யப்படுமெனவும், பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமால், இந்தத் தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டத் தீர்ப்பையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஐ.தே.கவின் உயர்மட்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டதைப்  படங்களில் காணலாம். (படப்பிடிப்பு; நிமலசிறி எதிரிசிங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X