2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மக்களிடம் கையளித்தார்...

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர வாவிக் கரையோரக் காட்சிகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பேரை வாவியின் கிழக்கு கரையோரத்தை அபிவிருத்தி செய்து பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கரையோர பூங்காவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (12) முற்பகல் மக்களிடம் கையளித்தார்.

கொழும்பு நகரை அண்டிய நகர அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான உலக வங்கியின் நிதியுதவியிலேயே இந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள பேரை வாவியின் நீர் சுத்திகரிப்பு செயற்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி இதன்போது உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்த சமரசிங்ஹ, பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்ஹ உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .