2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முதற்படி...

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்  

2017ஆம் ஆண்­டுக்கான தரம் ஐந்து புல­மைப்­ப­ரிசில் பரீட்சை, நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3,014 பரீட்சை நிலையங்களில், இன்று நடைபெற்றது. இம்முறை மூன்று இலட்சத்து 56,728 பேர் பரீட்­சைக்குத் தோற்­றியுள்ளனர். இவர்களில் 562 பேர் விசேட தேவையுடைய மாண­வர்­களாவர். பரீட்சைக் கட­மை­களில், 28 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்றுக் காலை பரீட்சை நிலையங்களுக்கு, தமது பெற்றோர் மற்றும் பாதுகாவலருடன் வந்த மாணவர்கள், அவர்களிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு பரீட்சை நிலையங்களுக்குள் சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. இதற்கமைவாக,  கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள மாணவர்களை படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .