2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விமானப்படையின் சாகசக் கண்காட்சி..

S. Shivany   / 2021 மார்ச் 04 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படையின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானப்படையின் சாகசக் கண்காட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (03) கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.

இந்திய விமானப்படையின் சாரங், சூர்யகிரன் மற்றும் தேஜாஸ் விமானப் படையணிகள் மற்றும் இலங்கை விமானப்படையின் விமானங்கள் இந்த விமான கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இக்கண்காட்சி இன்று(4) மற்றும் நாளை  மாலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

14 இந்திய விமானப்படை ஹெலிகப்டர்கள் மற்றும் ஹாக் (ர்யுறுமு) ஜெட் விமானங்கள் மற்றும் இலங்கை விமானப்படை ஹெலிகப்டர்கள் செஸ்னா 150, வை -12, பி -200, எம்.ஏ -60 மற்றும் எப் -7 போர் விமானங்கள் உட்பட 24 விமானங்கள் இந்த கண்காட்சியை அலங்கரிக்கின்றன.

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாதுகாப்பு செயலாளர் உட்பட முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், இந்திய மற்றும் பங்களாதேஷ் விமானப்படை அதிகாரிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .