2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வழிபாடுகள் இன்றி 10 சடலங்கள் நல்லடக்கம்

Editorial   / 2019 மே 02 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வசந்த சந்தரபால

கல்முனை, சாய்ந்தமருது வீட்டுக்குள், ஏப்ரல் 26ஆம் திகதியன்று வீடொன்றுக்குள் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பலியான 16 பேரின் சடலங்களும், பொலிஸாரின் தலையீட்டுடன் இன்று (02) புதைக்கப்பட்டன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் பலியான, 10 ஆண்களின் சடலங்களும் மத சடங்குகளின்றி புதைக்கப்பட்டன எனத் தெரிவித்த அவர், சிறுவர்கள் அறுவரின் சடலங்கள் மத சடங்குகளுடன் புதைக்கப்பட்டன என்றும்  தெரிவித்தார்.

பிரதேசத்திலுள்ள மதகுருவொருவரின் ஏற்பட்டின் கீழ், அவருடைய கோரிக்கையின் பிரகாரம், மேற்கண்டவாறு புதைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .