2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஹட்டனிலும் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஜூலை 27 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹட்டன் மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகள், நீதிமன்ற வளாகத்தில் இன்றுக் காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் சம்பவமானது,  நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக,சட்டத்தரணிகள் இதன்போது தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், நீதிமன்ற  செயற்பாடுகள் முற்றாக செயழிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X