2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

50 வீரர்கள், அதிகாரிகளைக் காணவில்லை

Editorial   / 2018 மே 22 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த மாதம் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியுள்ள நிலையில், காணாமல்போயுள்ள 50 தடகள வீரர்கள், அதிகாரிகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் தேடி வருவதாகவும் இன்னொரு 190 பேர் புகலிடத்தை எதிர்பார்ப்பதாகவும் அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீற்றர் டட்டன் இன்று தெரிவித்துள்ளார்.

2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்பேணிலும் 2002ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்டரிலும் 2014ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவிலும் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றபோதும் இம்முறை எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .