2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

அத்லெட்டிகோவை வென்ற செல்சி

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், றோமானியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடான முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி வென்றது.

செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒலிவியர் ஜிரூட் பெற்றிருந்தார்.

இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான லேஸியோவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று இறுதி 16 அணிகளுக்கான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வென்றிருந்தது.

ஜேர்மனிய புண்டெஸ்லீகா கழகமான பயேர்ண் சார்பாக, றொபேர்ட் லெவன்டோஸ்கு, ஜமல் முஸியாலா, லெரோய் சனே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோக்கின் கொரேரா பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .