2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரையிறுதியில் பார்ட்டி, பெடரர்

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, உலகின் முதல்நிலை வீராங்கனை அஷ்லெய் பார்ட்டி, உலகின் மூன்றாம்நிலை வீரர் ரொஜர் பெடரர் ஆகியோர் தகுதிபெற்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று நடைபெற்ற தனது காலிறுதிப் போட்டியில் உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெற்றா குவிற்றோவாவை எதிர்கொண்ட அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டி, 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், தனது காலிறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரனை போராடி வென்று அரையிறுதிப் போட்டிக்கு சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் தகுதிபெற்றார்.

இப்போட்டியின் முதலாவது செட்டை 6-3 என ரொஜர் பெடரர் கைப்பற்றியிருந்தபோதும் இரண்டாவது, மூன்றாவது செட்களை 2-6, 2-6 என இழந்திருந்தார்.

இந்நிலையில், நான்காவது செட்டில் ஏழு முறை வெற்றி பெறுவதற்கு ஒரு புள்ளி மாத்திரமே தேவையான நிலையிலிருந்த டெனிஸ் சான்ட்கிரனை முறியடித்து, 7-6 (10-8) என டைபிரேக்கரில் அந்த செட்டைக் கைப்பற்றிய ரொஜர் பெடரர், தீர்மானமிக்க ஐந்தாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இதேவேளை, நாளை அதிகாலை 5.30மணிக்கு நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியொன்றில், எஸ்தோனியாவின் அனெட் கொந்தாவெய்ட்டை உலகின் மூன்றாம்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப் எதிர்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியொன்றில் சுவிற்ஸர்லாந்தின் ஸ்டான் வவ்றிங்காவை உலகின் ஏழாம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ் எதிர்கொள்ளவுள்ளதுடன், பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் உலகின் ஐந்தாம்நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தியெமை உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால் எதிர்கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .