2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர்: இறுதிப் போட்டியில் நடால்

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் 11ஆவது நாளான இன்று, உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

தனது அரையிறுதிப் போட்டியில் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸை எதிர்கொண்ட ஸ்பெய்னின் ரபேல் நடால், 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியொன்றில் உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்ட உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 6-2, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற பெண்களுக்கான மற்றைய அரையிறுதிப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் டேனியல் கொலின்ஸை எதிர்கொண்ட உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

அந்தவகையில், இலங்கை நேரப்படி நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள பெண்களுக்கான தனிநபர் இறுதிப் போட்டியில் பெட்ரா குவிற்றோவாவும் நயோமி ஒஸாகாவும் சந்திக்கின்றனர்.

இந்நிலையில், இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள ஆண்களுக்கான மற்றைய அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸின் லூகாஸ் போலியை உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச் எதிர்கொள்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .