2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரில் செரினா?

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் அதிகூடிய தனிநபர் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வைத்துள்ள, ஐக்கிய அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாடுவார் என அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பணிப்பாளரான கிரேய்க் டிலே தெரிவித்துள்ளார்.

23 தனிநபர் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ள செரினா வில்லியம்ஸ், இவ்வாண்டு ஜனவரியில், தான் எட்டு வார கர்ப்பிணியாக இருக்கும்போது வென்ற அவுஸ்திரேலிய பகிரங்கப் பட்டத்தை தக்கவைப்பதற்காக மீள வரவுள்ளதாக கிரேய்க் டிலே கூறியுள்ளார்.

உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையாக செரினா வில்லியம்ஸ், தனது பிள்ளையைப் பிரசவிப்பதற்கு முன்னர், அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரில் விளையாடத் திட்டமிடுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, செரினா வில்லியம்ஸ் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கையில், உடற்றகுதியில் எங்கு இருக்கிறார் என்பதை தீர்மானிப்பது அவரைப் பொறுத்தது என கிரேய்க் டிலே கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .