2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆர்சனல், யுனைட்டெட் வென்றன

Editorial   / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டிகளில் ஆர்சனல், மன்செஸ்டர் யுனைட்டெட் ஆகிய அணிகள் வென்றன.

ஆர்சனல், 5-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றனை வென்றது. ஆர்சனல் சார்பாக, ஆரோன் றம்ஸி மூன்று கோல்களையும் லோரன்ட் கொஷியென்ஸ்கி, பியர் எம்ரிக் அபுமெயாங் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை டொமினிக் கல்வேர்ட்-லூயின் பெற்றார்.

மன்செஸ்டர் யுனைட்டெட், 2-0 என்ற கோல் கணக்கில் ஹட்டெர்ஸ்பீல்ட் டெளணை வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக, றொமேலு லுக்காக்கு, அலெக்ஸிஸ் சந்தேஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

மன்செஸ்டர் சிற்றி, பேர்ண்லி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. மன்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை டனிலோ பெற்றதோடு, பேர்ண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜொஹன் பேர்க் குட்முன்ட்சன் பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .