2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இங்கிலாந்தை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்றுள்ளது.  

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணிமுதலில் களத்தடுப்பில் ஈடுபடும் என அறிவித்தார். 

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், எவின் லூயிஸ் 51 (28), கிறிஸ் கெய்ல் 40 (21), றொவ்மன் பவல் 28 (19) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அடில் றஷீட், லியம் பிளங்கெட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

பதிலுக்கு, 177 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, 19.3 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அலெக்ஸ் ஹேல்ஸ் 43 (17), ஜொஸ் பட்லர் 30 (27), ஜொனி பெயர்ஸ்டோ 27 (21), லியம் பிளங்கெட் 18 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கார்லோஸ் பிறத்வெய்ட், கெஷ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  

போட்டியின் நாயகனாக, சுனில் நரைன் தெரிவானார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .