2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இடைநிறுத்தப்பட்டார் உஸ்மன் டெம்பிலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனி கால்பந்தாட்டக் கழகமான பொரிசியா டொட்டமுண்ட், தமது முன்கள வீரரான உஸ்மன் டெம்பிலியை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது. 

ஸ்பானியக் கழகமான பார்சிலோனா, டெம்பிலியை ஒப்பந்தம் செய்வதற்கான கோரிக்கையை நான்கு நாட்களுக்கு முன்னர் டொட்டமுண்ட் நிராகரித்திருந்தமையைத் தொடர்ந்தே, இடைநிறுத்தமும் வந்துள்ளது.  

கடந்த வியாழக்கிழமை பயிற்சியைத் தவறவிட்டமை காரணமாக, தண்டம் விதிக்கப்பட்டு, இன்று வரை, 20 வயதான பிரான்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் வீரரான டெம்பிலி இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது இடைநிறுத்தமானது முடிவில்லாமல் நீடிக்கப்பட்டுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X