2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியாவை வென்றது இங்கிலாந்து

Editorial   / 2018 ஜூலை 15 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், லோர்ட்ஸில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து,50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜோ றூட் 113 (116), ஒய்ன் மோர்கன் 53 (51), டேவிட் வில்லி ஆட்டமிழக்காமல் 50 (31), ஜேஸன் றோய் 40 (42), ஜொனி பெயார்ஸ்டோ 38 (31) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 3, யுஸ்வேந்திர சஹால், உமேஷ் யாதவ், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 323 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்று 86 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், சுரேஷ் ரெய்னா 46 (63), அணித்தலைவர் விராத் கோலி 45 (56), மகேந்திர சிங் டோணி 37 (59), ஷீகர் தவான் 36 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லியம் பிளங்கட் 4, அடில் ரஷீட், டேவிட் வில்லி ஆகியோர் தலா 2, மொயின் அலி, மார்க் வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஜோ றூட் தெரிவானார்.

அந்தவகையில், இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியா வென்றிருந்த நிலையில் தொடர் தற்போது 1-1 என சமநிலையாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .