Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 11 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஜொஹன்னஸ்பேர்க்கில் நேற்று இடம்பெற்ற நான்காவது போட்டியில், டக் வேர்த் லூயிஸ் முறைப்படி 5 விக்கெட்டுகளால் தென்னாபிரிக்கா வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 289 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் 109 (105), விராத் கோலி 75 (83), மகேந்திர சிங் டோனி ஆட்டமிழக்காமல் 42 (43) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லுங்கி என்கிடி, கஜிஸோ றபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 290 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 7.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 42 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் மழை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதன்பின்னர், 28 ஓவர்களில் 202 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு தென்னாபிரிக்காவுக்கு வழங்கப்பட்ட நிலையில், 25.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஹென்றிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 43 (27), டேவிட் மில்லர் 39 (28), ஏ.பி டி வில்லியர்ஸ் 26 (18), அன்டிலி பெக்லுவாயோ ஆட்டமிழக்காமல் 23 (11) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இப்போட்டியின் நாயகனாக, ஹென்றிச் கிளாசென் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
35 minute ago
53 minute ago