Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேச போட்டித் தொடரில், செஞ்சூரியனில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
இப்போட்டியில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இந்தியா, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மனீஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 79 (48), மகேந்திர சிங் டோணி ஆட்டமிழக்காமல் 52 (28), சுரேஷ் ரெய்னா 31 (24), ஷீகர் தவான் 24 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜூனியர் டலா 2, ஜெ.பி டுமினி, அன்டிலி பெக்லுவாயோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெத்தாடிய தென்னாபிரிக்கா, ஒரு கட்டத்தில் ஐந்து ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 38 ஓட்டங்களைப் பெற்றவாறு காணப்ப்பட்டபோதும் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்றிச் கிளாசென், ஜெ.பி டுமினி ஆகியோரின் அதிரடித் துடுப்பாட்டம் காரணமாக, 18.4 ஓவர்களில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஹென்றிச் கிளாசென் 69 (30), ஜெ.பி டுமினி ஆட்டமிழக்காமல் 64 (40) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜெய்டேவ் உனட்கட் 2, ஷர்துல் தாக்கூர், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஹென்றிச் கிளாசென் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
7 hours ago
25 Apr 2024