2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலகுவாக வென்றது இந்தியா

Editorial   / 2018 பெப்ரவரி 04 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா, இந்திய அணிகளுக்கிடையிலான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த இந்திய அணி, செஞ்சூரியனில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கின்றது.

இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 32.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில், ஜெ.பி டுமினி 25 (39), காயா சொன்டோ 25 (45) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 5, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 119 ஓட்டங்களை வெற்றியிலக்காக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா,  20.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் ஆட்டமிழக்காமல் 51 (56), விராத் கோலி ஆட்டமிழக்காமல் 46 (50) ஓட்டங்களைப் பெற்றனர். வீழ்த்தப்பட்ட விக்கெட்டை கஜிஸோ றபடா கைப்பற்றியிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக யுஸ்வேந்திர சஹால் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .