2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு மீண்டும் தோல்வி; இரசிகர்கள் இரகளை

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற போட்டியில், இந்திய அணியிடம் 9 விக்கெட்டுகளால் இலங்கை அணி தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து, அவ்வணியின் இரசிகர்கள், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தோல்வியைத் தொடர்ந்து, மைதானத்திலிருந்து புறப்பட முயன்ற பஸ்ஸை, இரசிகர்கள் மறிந்ததோடு, வீரர்களின் திறமை வெளிப்பாடு தொடர்பாகவும், தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

"எங்கள் கிரிக்கெட், எங்களுக்கு வேண்டும்", "கிரிக்கெட்டில் அரசியல் வேண்டாம்" போன்ற சுலோகங்களை எழுப்பிய அந்த இரசிகர்கள், தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டனர். சுமார் 50 இரசிகர்கள், இவ்வாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கலகமடக்கும் பொலிஸார் அங்கு அழைக்கப்பட்ட  பின்னரேயே, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலைமை காரணமாக, மைதானத்திலிருந்து புறப்பட வேண்டிய இலங்கை அணியின் பஸ், சுமார் 30 நிமிடங்களால் பிந்தியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .