2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏ.சி மிலனிடம் தோற்றது பார்சிலோனா

Editorial   / 2018 ஓகஸ்ட் 05 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இன்று காலை இடம்பெற்ற போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா தோற்றது. இப்போட்டியில், ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே சில்வா பெற்றிருந்தார்.

இதேவேளை, குறித்த தொடரின் மற்றொரு போட்டியில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவன்டஸை 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றிருந்தது. றியல் மட்ரிட் சார்பாக, மார்கோ அஸென்ஸியோ இரண்டு கோல்களையும் கரித் பேல் ஒரு கோலையும் பெற்றனர். ஜுவன்டஸின் கோல் ஓவ்ண் கோல் மூலமாகவே கிடைக்கப் பெற்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .