2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.பி.எல் நாளை ஆரம்பிக்கின்றது

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 08 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான, இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்) நாளை ஆரம்பிக்கின்றது.

நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸுக்கும், றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருக்குமிடையே சென்னையில் நாளையிரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியுடனேயே ஐ.பி.எல்லின் 14ஆவது பருவகாலம் ஆரம்பிக்கின்றது.

கிரிக்கெட் காரணங்கள் தவிர, இந்தியாவில் கொவிட்-19 பரவலானது மீண்டும் அதிகரிக்கின்ற நிலையில் இத்தொடர் இடம்பெறுகின்றமையானது மிகுந்த கவனம் பெறுகின்றது. ஏனெனில், இவ்வாண்டுயிறுதியில், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவிலேயே இடம்பெறவுள்ளது.

இதுவரையில் ஐந்து வீரர்களும், ஒரு பயிற்சியாளரொருவரும் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உலகக் கிண்ணத் தொடரானது இம்முறை இந்தியாவில் நடைபெறுகின்றமை காரணமாக இந்திய வீரர்கள் தவிர, வெளிநாட்டு வீரர்களுக்கும் இத்தொடரானது சிறந்த முன்னோட்ட களமாகக் காணப்படுகின்றது.

அணிகளைப் பொறுத்தவரையில், ஹட்-ட்ரிக் தடவையாக சம்பியனாகும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் கொண்டதாகக் காணப்படுகின்றது. ஆனால், ஐ.பி.எல் என்றால் அதிர்ச்சிகள்தானே, ஆகவே இம்முறையும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காதெனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .