2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒப்பந்தத்தை நிராகரித்த எவின் லூயிஸ்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எவின் லூயிஸ், அவருக்கு வழங்கப்பட்ட வெள்ளைப் பந்து ஒப்பந்தத்தை நிராகரித்ததாக ஊடக வெளியீட்டொன்றில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலுள்ள இருபதுக்கு – 20 லீக்குகளில் விளையாடும் பொருட்டு மேற்கிந்தியத் தீவுகளின் சில வீரர்கள் கடந்த காலங்களில் ஒப்பந்தங்களை நிராகரித்திருந்த நிலையில், இதே காரணத்துக்காகத்தான் லூயிஸும் ஒப்பந்தத்தை நிராகரித்தார் என்பது உறுதிப்படுத்தவில்லை.

இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், சுனில் நரைன், அன்ட்ரே ரஸல், கெரான் பொலார்ட், டரன் பிராவோ, டுவைன் பிராவோ, மார்லன் சாமுவேல்ஸ், சாமுவேல் பத்ரி, டரன் சமி என எவருக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர், வேகப்பந்துவீச்சாளர்கள் கேமார் றோச், அல்ஸாரி ஜோசப், துடுப்பாட்ட வீரர் ஷை ஹோப் ஆகியோருக்கே அனைத்து வகையான போட்டிகளுக்குமான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு இப்பட்டியலிருந்த ஷனொன் கப்ரியல், தேவேந்திர பிஷூ ஆகியோருக்கு இம்முறை சிவப்பு பந்து ஒப்பந்தம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவப்பு பந்து ஒப்பந்தமானது கப்ரியல், பிஷூ தவிர கிரேய்க் பிறத்வெய்ட், றொஸ்டன் சேஸ், மிக்கேல் கமின்ஸ், ஷேன் டெளரிச், ஷனொன் கப்ரியல், ஷிம்ரோன் ஹெட்மயர், கெரான் பவல் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தில் கடந்தாண்டு இடம்பெற்றிருந்த துடுப்பாட்ட வீரர் ஜெர்மைன் பிளக்வூட், சுழற்பந்துவீச்சாளர் ஜொமெல் வொரிக்கான் இம்முறை இடம்பெறவில்லை.

இந்நிலையில், கார்லோஸ் பிறத்வெய்ட், அஷ்லி நேர்ஸ், றொவ்மன் பவல் ஆகியோருக்கு வெள்ளைப் பந்து ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டு குறித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜேசன் மொஹமட்டுக்கு இவ்வாண்டு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.

இதேவேளை, சுனில் அம்பிரிஸ், கீமோ போல், ரேமன் றெய்பர் ஆகியோருக்கு வளர்ச்சியடைந்துவரும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .