2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’கரித் பேலை கைச்சாத்திடுவதற்கான நம்பிக்கை முடிந்து விட்டது’

Editorial   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டிலிருந்து, கரித் பேலைக் கைச்சாத்திடுவதான, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் நம்பிக்கைகள் முடிந்து விட்டதாக, மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ தெரிவித்துள்ளார்.  

முன்கள வீரரான கரித் பேலை, றியல் மட்ரிட் விற்க விரும்பினால், கரித் பேலைக் கைச்சாத்திடுவதற்கு போராடுவேன் என மொரின்யோ கூறியிருந்தார்.  

இந்நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கெதிரான, றியல் மட்ரிட்டின் ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் கூட்டமைப்பின் சுப்பர் கிண்ண போட்டியில், ஆரம்பத்திலேயே அணியில் கரித் பேல் இடம்பெற்றதைத் தொடர்ந்தே, றியல் மட்ரிட்டிலிருந்து, கரித் பேலைக் கைச்சாத்திடும் வாய்ப்புகள் இல்லை என்பதை ஒத்துக்கொண்டுள்ளார்.  

இதேவேளை, றியல் மட்ரிட்டிலிருந்து வெளியேறலாம் எனக் கூறப்பட்டுள்ளதா என கரித் பேலை வினவியபோது, “எனக்குத் தெரிந்த வரையில் இல்லை” என்று கூறியுள்ளார்.  

இந்நிலையில், வேல்ஸ் தேசிய கால்பந்தாட்ட அணியினதும் வீரரான கரித் பேலை, விற்பனை செய்வது குறித்து கருத்திற் கொள்ளவில்லை என றியல் மட்ரிட்டின் தலைவர் புளோரென்டினோ பெரேஸ் தெரிவித்துள்ளார்.  

கருத்துத் தெரிவித்த கரித் பேல், “எனது கால்பந்தாட்டத்தில் மட்டும் நான் கவனஞ் செலுத்துகிறேன். வேறெதுவையும் நான் கேட்கவில்லை. நான் எதனையும் வாசிக்கவோ இல்லை” என்று கூறியுள்ளார்.  

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான டொட்டென்ஹாமிலிருந்து, உலக சாதனைத் தொகையான, 85 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ்களுக்கு, றியல் மட்ரிட்டில் இணைந்த 28 வயதான பேல், றியல் மட்ரிட்டிலேயே இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக, கடந்த பருவகால முடிவில் தெரிவித்திருந்தார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X