2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காலிறுதியில் பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான பிரெஞ்சுக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 4-1 என்ற கோல் கணக்கில் சுஷூ அணியை வென்றே காலிறுதிக்கு பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதிபெற்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, அஞ்சல் டி மரியா மூன்று கோல்களையும் எடின்சன் கவானி ஒரு கோலையும் பெற்றனர். சுஷூ அணி சார்பாகப் பெறப்பட்ட கோலை புளோரியன் மார்ட்டின் பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .