2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காலிறுதியில் ஹலெப், பெடரர்

Editorial   / 2018 ஜனவரி 22 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டிகளில் வென்ற உலகின் முதல்நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப், உலகின் இரண்டாம்நிலை வீரரான ரொஜர் பெடரர் ஆகியோர் காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.

சிமோனா ஹெலெப், 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஜப்பானின் நயோமி ஒஸாகாவை வென்றார்.

உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் கரோலின் கர்சியா, தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 3-6, 2-6 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் நடப்புச் சம்பியனான ரொஜர் பெடரர், 6-4, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஹங்கேரியின் மார்ட்டன் புச்சோவிச்சை வென்றார்.

உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்ம், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 2-6, 6-4, 6-7 (4-7), 7-6 (9-7), 3-6 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரேனிடம் தோற்று வெளியேறினார்.

ஆறு தடவைகள் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் சம்பியனான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 6-7 (4-7), 5-7, 6-7 (3-7) என்ற நேர் செட்களில் தென்கொரியாவின் சொங் யொங்கிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .