2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காலிறுதியில் ஹலெப்

Editorial   / 2018 ஜூன் 04 , பி.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரில், இன்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் வென்ற உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப், காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

சிமோனா ஹலெப், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் எலிஸே மேர்ட்டன்ஸை வென்றார்.

இதேவேளை, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, நேற்று ஆரம்பித்து போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்று வரை தொடர்ந்த தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-7 (5-7), 3-6 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் டரியா கஸட்கினாவிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், நேற்று  இடம்பெற்ற நான்காவது சுற்றுப் போட்டிகளில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 4-6, 7-6 (7-4), 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் கரென் காச்சனோவை வென்றும் உலகின் எட்டாம் நிலை வீரரான ஒஸ்திரியாவின் டொமினிக் தெய்ம், 6-2, 6-0, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கீ நிஷிகோரியை வென்றும் 12 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெய்னின் பெர்ணான்டோ வெர்டாஸ்கோவை வென்றும் காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறினர்.

இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீரரான பெல்ஜியத்தின் டேவிட் கொபின், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 5-7, 6-4, 0-6, 3-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மார்கோ செக்சினாட்டோவிடம் நேற்று தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .