2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

குளோபல் லீக் இவ்வாண்டு இல்லை

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகவிருந்த, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் இ-20 குளோபல் லீக்கின் முதலாவது பருவகாலம் இவ்வாண்டு நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிலையானதொரு தொலைக்காட்சி உரிம ஒப்பந்தத்தை பெறாமை, தொடருக்கான பிரதான உரிமைகள் அனுசரணையைப் பெறாமை காரணமாக குளோபல் இ-20 தொடர் ஒத்திவைக்கப்பட்டமைக்கான பிரதான காரணங்களாக கூறப்படுகின்றன. இதுதவிர, இத்தொடரை ஆரம்பிப்பதற்கான மூளையாகச் செயற்பட்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி ஹரூன் லோர்கட், தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையிலிருந்து கடந்த மாதம் விலகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X